Friday, January 29, 2010

மழையில்

யாருக்கும் தெரியாது
என்றெண்ணி
நடந்தேன் மழையில்

மழைக்குத் தெரிந்தது
அது என்னைக் கேட்டது

நீயேன் அழுகிறாய்

என்னை

மன்னிக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
என்னை

நீங்களும்

நான் எழுதும் கதையில்
நீங்களும்
உங்கள் கதையை
எழுதியபடி

மீட்டெடுத்தல்

அடைபட்ட வார்த்தைகளை
மீட்டெடுக்க வேண்டும்
கவிதையிலிருந்து

கூடவே வந்த மழை

கூடவே வந்த மழை
பயணத்தை முடித்திருந்தது
ஜன்னல் கம்பிகளில்
துளிகளை விட்டு விட்டு

Monday, January 18, 2010

நீ

ஊதி ஊதி
நீ அணைத்து
கொண்டு போனாய்
ஒளியை

மோதி மோதி
நான் உடைத்து
கடந்து போனேன்
இருளை

பழகு

தப்புதப்பாக
கணக்குப் போட்டாலும்
புன்னகைத்தபடியே
திருத்தி
சொல்லிக் கொடுப்பார்
கணக்கு வாத்தியார்

பிரம்பு பயன்படுத்தாத
அவர் பிரியம்
மகத்தானது

கூடவே சொல்லுவார்
வாழ்க்கை ஒரு
கணக்கு மாதிரி
அத தப்புவராம
போடப் பழகு