Monday, January 10, 2011

விளிம்பில்

போதும் என்ற வார்த்தையை
பழகி வைத்திருப்பவர்கள்
தயாராகிவிடுகிறார்கள்
திருப்தியின் விளிம்பில் நின்று
போதும் என்று சொல்வதற்கு

வெளியேற்றம்

இந்தக் கவிதையிலிருந்து
நீ வெளியேறினால் என்ன
இந்த தாளில்
நீ இருந்துகொண்டே இருப்பதை
என்னால் உணர முடிகிறது

சொல்லிச் சென்ற வரி

உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை
என்று நீ சொல்லிச் சென்ற வரி
சொல்லிக்கொண்டிருக்கிறது
எவ்வளவோ எனக்கு

Monday, January 3, 2011

நீ தந்த வரிகள்

படித்து
கைதட்டி சிரித்து
ரசிக்கிறாய்
உனக்குத் தெரியாது
அது உன் கண்கள் தந்த
வரிகள்தான் என்று

முகவரி

துண்டு காகிதத்தில்
நீ எழுதித் தந்த
முகவரியைத்
தொலைத்துவிட்டேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும்

Tuesday, December 28, 2010

கடிதம்

முதியவருக்கு வந்த கடிதத்தை
படித்துக் காட்டினேன்
என் தந்தைக்கு
எழுதுவது போன்று

Sunday, December 12, 2010

சொல்லியபடி

நினைவுக்கடியில்
ஓடும் நதி
உன் பெயர்
சொல்லியபடி