Saturday, June 19, 2010

ஒரு குரல்

நள்ளிரவில்
குளிரில் விரைத்து
இறந்து போன பெரியவரை
செய்திக்காக
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்

கூட்டத்திற்கு வெளியே
அப்பாவியாய்
ஒரு குரல் கேட்டது

அவரு குளிர்ல செத்துப் போயிட்டாரா
பசியில செத்துப் போயிட்டாரா

No comments: