Friday, June 11, 2010

படிப்படியாய்

ஒவ்வொரு படியாக
குழந்தை இறங்க
கூடிக் கொண்டே
வந்தது வயது

கடைசி படியிறங்கியபோது
குழந்தை
மூதாட்டியாகி இருந்தது

நடைபாதையில்
குழந்தையும் மூதாட்டியும்
மாறி மாறி நடந்தனர்

பார்க்கத் தொடங்கினேன்
என்னையும் அதுபோல

படிப்படியாய்

3 comments:

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி அருணா.

கல்யாணி சுரேஷ் said...

நிறைய தோணுதுங்க. முழு வாழ்க்கையையும் ஒரு கவிதைக்குள்ள பார்த்துட்ட ஒரு உணர்வு மேலோங்குது. அருமையா இருக்கு ராஜா.