Saturday, February 20, 2010

அவளுக்கான வரிகள்

1-

அன்பின் துளி
போதும்
நீந்தி மகிழவும்
நிறைவாய்
கரையேறவும்

2-

ஒற்றை வரி
கவிதைபோல
புன்னகைக்கிறாய்
இதில் என்னால்
படிக்க முடிகிறது
நிறைய பக்கங்களை

3-

அப்போதுதான்
உன் சொற்களில்
பனித்துளிகள் ஒட்டி
இருந்ததைப் பார்த்தேன்

அதுவரை
இருந்ததற்காக
நன்றி சொன்னேன்

4-

பிறகு அவர்கள்
முத்தத்தின் குழந்தைகள்
ஆனார்கள்

5 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எல்லா கவிதைகளும் அருமை.
தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளுடன் இணைக்கவும்.
இன்னும் நிறைய நேயர்கள் படிக்க முடியும்.

கல்யாணி சுரேஷ் said...

அவள் sorry அவங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க sir

பிரேமா மகள் said...

பின்றிங்க பாஸ். யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி?

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!!

//அன்பின் துளி
போதும்
நீந்தி மகிழவும்
நிறைவாய்
கரையேறவும்//
இந்த வரிகள் அருமை!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி திருநாவுக்கரசு பழனிசாமி,கல்யாணி,பிரேமா மகள்,சுகி.